களவில் கூற்று நிகழ்த்துபவர்கள்
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி கிழவன் கிழத்தி ஆகிய அறுவரும் களவில் கூற்று நிகழ்த்துபவர்கள் ஆவர். இதனைத் தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகின்றது.
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு
அளவியல் மரபின் அறுவகை யோரும்
களவில் கிளவிக்குரியர் என்ப
கற்பில் கூற்று நிகழ்த்துபவர்கள்
கற்பில் கூற்று நிகழ்த்துபவர்களாகப் பாணன், கூத்தன், விறலி, பரத்தை அறிவர், கண்டோர், பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி உள்ளிட்டோரைத் தொல்காப்பியம் பகர்கின்றது.
பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரோடு தொகைஇ
தொல்நெறி மரபின் கற்பிற்கு உரியர்
No comments:
Post a Comment