Friday, 24 May 2024

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (பயன்)

சொல்லிய பொருளால் பிறிதொன்று பயக்கச் செய்வது பயன் ஆகும் என்று பேராசிரியர் விளக்கம் தருகின்றார். தொல்காப்பியர் பயன் பற்றிக் கூறுகையில், 

இதுநனி பயக்கும் இதன்மாறு என்னும்
தொகுநிலைக் கிளவி பயன் எனப்படுமே
என்கின்றார். 

இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர், "யாதானும் ஒரு பொருளை கூறிய வழி இதன் பின்பும் இதனைப் பயக்கும் என விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக் கூறுதல் பயன் எனப்படும் என்றவாறு" என்கின்றார்.

No comments:

Post a Comment