Sunday, 26 May 2024

தொல்காப்பியரின் செய்யுள் உறுப்புகள் (அடி)

தொல்காப்பியர் நாற்சீர் பற்றியே அடியை வகுக்கிறார். இதனை, 
நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே 
என்ற நூற்பா தெளிவுபடுத்தும்.

அடியின் சிறப்பால் பாட்டு அமையும் என்பது தொல்காப்பியர் கருத்து.

அடி பாகுபாடு (5)
1. குறளடி - 4 எழுத்துகள் முதல் 6 எழுத்துகள் வரல்
2. சிந்தடி - 7 எழுத்துகள் முதல் 9 எழுத்துகள் வரல்
3. அளவடி (நேரடி) - 10 எழுத்துகள் முதல் 14 எழுத்துகள் வரல்
4. நெடிலடி - 15 எழுத்துகள் முதல் 17 எழுத்துகள் வரல்
5. கழிநெடிலடி - 18 எழுத்துகள் முதல் 20 எழுத்துகள் வரல்

ஐவ்வகை அடிகளும் ஆசிரியப்பாவில் வரும்.

முடுகியலடி - எழுசீரால் வருவது

No comments:

Post a Comment