Friday, 24 May 2024

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (களன்)

தொல்காப்பியர் களன் என்பதைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூறியுள்ளார். இவ் உறுப்பு அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வரக்கூடியது ஆகும். தொல்காப்பியர் களன் என்பதன் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் நூற்பா வருமாறு
ஒரு நெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும் 
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப 
தொல்காப்பியர் களன் என்பதையும் இடம் என்பதையும் ஒரே பொருளில் கையாண்டு உள்ளார். 
பேராசிரியர் களன் என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்.
களன் என்பது முல்லை குறிஞ்சி முதலாயினவும் உணரச் செய்தல் மற்றும் தன்மை முன்னிலை படர்க்கையுமாம் 

தொல்காப்பியர் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகிய இயல்களில்  அகமாந்தர்களுக்குரிய கூற்றுக்களைக் குறிப்பிடும்போது களன் என்பதைப் பயன்படுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment