திணை என்ற சொல்லிற்கு ஒழுக்கம் என்பது பொருள். இவ்வொழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் என இரு வகைப்படும். அக ஒழுக்கம் என்பது தலைவனும் தலைவியும் கூடிய வழி பெறும் பேரின்பம் பற்றியது ஆகும். இதில் தலைவன், தலைவியின் இயற்பெயர் சுட்டிக் கூறப் பெறா. புற ஒழுக்கம் என்பது அகம் அல்லாத ஒழுகலாறு. அதாவது, இஃது இவ்வாறு இருந்தது எனச் சுட்டப்படுவது. கொடை, வீரம் போன்றவை இதில் அடங்கும். தொல்காப்பியர் அகப்பாட்டு உறுப்புகளுள் திணையை முதன்மையாகக் குறிப்பிடுகின்றார். இதனை,
கைக்கிளை முதலா எழு பெருந்திணையும் / முற் கிளந்தனவே
முறைநெறி வகையின என்ற நூற்பா தெளிவுபடுத்தும்.
திணை கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழு வகைப்படும்.
No comments:
Post a Comment