இரண்டு அசைகளால் ஓசை நிறைந்தும் மூன்றசைகளால் ஓசை நிறைந்தும் முடிவது சீர் எனப்படும்.
தொல்காப்பியர் சீர் பற்றிக் கூறுகையில்,
ஈரசை கொண்டு மூவசை புணர்த்தும்
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே
என்கின்றார்.
இயற்சீர் - இயலசை மயங்குதல்
ஆசிரிய உரிச்சீர் - உரியசை மயங்குதல்
உரியசை முன்னர் நிரையசை சேர்ந்து வரினும் உரியசை மயக்கம் எனக் கொண்டு ஆசிரிய உரிச்சீராம் (நேர்பு + நிரை & நிரைபு + நிரை)
நேர்பு, நிரைபு முன்னர் நேரசை வரின் அவ்விரண்டும் இயற்சீராகும். (நேர்பு + நேர் & நிரைபு + நேர்)
வெண்பா உரிச்சீர் - இயற்சீர் இறுதி முன்னர் நேர் வரல்
வஞ்சி உரிச்சீர் - வெண்பா உரிச்சீர் அல்லாத நிரை இறுதி வந்த கனிச்சீர்.
No comments:
Post a Comment