Thursday, 23 May 2024

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (கேட்போர்)

தொல்காப்பியர் குறிப்பிடும் கூற்று,  கேட்போர் என்ற இரண்டு உறுப்புகளும் நாடக வழக்கு சார்ந்து அமைபவை ஆகும். கருத்துப் புலப்பாட்டில் கூற்று, கேட்போர் இருவரும் இன்றியமையாதவர்களாக அமைவர். கூற்று என்பது கவிஞர் நோக்கியதாகவும் கேட்போர் என்பது வாசகர் நோக்கியதாகவும் அமைகின்றது. தொல்காப்பியர் கிழவன் கிழவியின் கூற்றைக் கேட்பவர்களாகப் பதின்மரைக் குறிப்பிடுகின்றார். மேலும் கூற்றைக் கேட்பதற்கான சூழலையும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்துக்களை அரண் செய்யும் விதத்தில் பின்வரும் நூற்பாக்கள் அமைந்துள்ளன. 

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் 
நினையும் காலை கேட்குநர் அவரே 

பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி 
யார்க்கும் வரையார் யாப்போடு புணர்ந்தே 

பரத்தை வாயில் என இரு கூற்றும் 
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே

தொல்காப்பியர் மக்கள் இல்லாத அஃறிணைப் பொருட்கள் சொல்வதாகவும் கேட்பதாகவும் கூறுகின்றார்.  

ஞாயிறு திங்கள் அறிவே நாணே
 கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே 
அவையல பிறவும் நுதலிய நெறியாற்
சொல்லுந போலவும் கேட்குந போலவும் 
சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர்  
இந்நூற்பா பிற்காலத்தில் தூது இலக்கியம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். 

No comments:

Post a Comment