தொல்காப்பியர் செய்யுளியலில் இரு வகை எச்சங்களைப் பற்றிக் கூறியுள்ளார். இவ் எச்சங்கள் கவிதைப் பொருள் கொள்ளும் முறை பற்றியவை. புலவன் ஒருவன் தம் கவிதையில் எல்லாவற்றையும் அப்படியே புலப்படும்படி சொல்லிவிடமாட்டான். தம் கவிதையைப் படிப்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலவற்றை விட்டு விடுவது உண்டு. அவற்றையே எச்சம் என்ற சொல்லால் கூறுகிறார் தொல்காப்பியர்.
சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக் கொள்ளச் செய்தல் எச்சம் ஆகும். இஃது கூற்றினும் குறிப்பினும் வரும்.
சொல்லெச்சம் - ஒரு சொல்லைப் பெய்து பொருள் கொள்வது.
குறிப்பெச்சம் - ஒரு பொருள் எஞ்ச நிற்பது.
சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்
என்று தொல்காப்பியர் எச்சம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment