கவிதையில் பொதிந்து கிடக்கும் பாடுபொருளைக் கூறுவதாக அமைந்தது பொருள் வகை என்னும் செய்யுள் உறுப்பு. இதில் இன்பம், துன்பம், புணர்வு, பிரிவு, ஒழுக்கம் ஆகியவை கூறப்படும். இளம்பூரணர், "இத்திணைக்குரிய பொருள் இப்பொருள் என்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள் வகையாம்" என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி
இதுவாகு இத்திணைக்கு உரிப்பொருள் என்னாது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப
No comments:
Post a Comment