Sunday, 26 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (நோக்கு)

பாடலை இயற்றிய பின்பு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி எல்லாம் சரியாக உள்ளனவா? என்று மீள்பார்வை செய்வது நோக்கு ஆகும். 

நோக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பா வருமாறு:
மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே 

இளம்பூரணர் நோக்கு மூன்று வகைப்படும் என்கின்றார்.

1. ஒரு நோக்காக ஓடுதல் 
2. பல நோக்காக ஓடுதல் 
3. இடையிட்டு நோக்குதல் 

No comments:

Post a Comment