சீரோடு சீரினைத் தொடுப்பதும் அடியோடு அடியினைத் தொடுப்பதும் தொடை ஆகும்.
தொல்காப்பியர் பத்து தொடைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
1. மோனை
2. எதுகை
3. முரண்
4. இயைபு
5. அளபெடை
6. பொழிப்பு
7. ஒரூஉ
8. செந்தொடை
9. நிரனிறுத்தல்
10. இரட்டை யாப்பு
மோனை
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அடிதொறும் முதற்கண் ஓரெழுத்தே வரத் தொடுப்பது ஆகும்
எதுகை
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்
அடிதொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஆகும்.
முரண்
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே
முரண் இரு வகைப்படும்.
1. சொல் முரண்
2. பொருள் முரண்
இயைபு
இறுவாய் ஒப்பின் அஃது இயைபென மொழிப
அடிதொறும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது.
அளபெடை
அளபெழின் அவையே அளபெடைத் தொடையே
அடிதொறும் அளபு எழத் தொடுப்பது.
பொழிப்பு (1*3)
ஒரு சீரிடையிட்டு எதுகை ஆயின்
பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே
ஒரூஉ (1*4)
இருசீர் இடையிடின் ஒரூஉ என மொழிப
செந்தொடை
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
சொல்லியற் புலவர் அது செந்தொடை என்ப
நிரல்நிறை
பொருளைச் சேர நிறுத்திப் பயனையும் சேர நிறுத்தல்.
இரட்டை யாப்பு
ஓரடி முழுதும் ஒரு சொல்லே வருதல்.
No comments:
Post a Comment