களவொழுக்க நிகழ்வுகள் (4)
1. காமப் புணர்ச்சி 2. இடந்தலைப்படல் 3. பாங்கொடு தழால் 4. தோழியிற் புணர்வு
கற்பொழுக்க நிகழ்வுகள் (4)
அ. மறை வெளிப்படல் ஆ. தமரிற் பெறுதல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 1. மலிவு 2.புலவி 3. ஊடல் உணர்தல் 4. பிரிவு ஆகிய கற்பொழுக்க நிகழ்வுகள் அமையும்.
இதனையே தொல்காப்பியர் பின்வரும் நூற்பாக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வும்
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிகள் மறையோர் ஆறே
மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும்
இவை முதலாகிய இயல் நெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே
No comments:
Post a Comment