Sunday, 26 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (தூக்கு)

தூக்கு என்பது ஓசை ஆகும். தூக்கு பற்றிப் பேராசிரியர், "பாக்களைத் துணிந்து நிறுத்துதல்" என்று விளக்கம் தருகின்றார்.

இளம்பூரணர் தூக்கு பற்றிக் கூறும் விளக்கம் வருமாறு:
தூக்காவது பாக்களைத் துணிந்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பம் ஆதலின் தூக்கு எனினும் ஓசை எனினும் ஒக்கும்.

பாக்களின் ஓசை
வெண்பா - செப்பலோசை
ஆசிரியப்பா -அகவலோசை
கலிப்பா - துள்ளலோசை
வஞ்சிப்பா - தூங்கலோசை

தொல்காப்பிய நூற்பாக்கள் பின்வருமாறு:
அகவல் என்பது ஆசிரி யம்மே

அஃது அன்று என்ப வெண்பா யாப்பே

துள்ளல் ஓசை கலியென மொழிப

தூங்கல் ஓசை வஞ்சி யாகும்


No comments:

Post a Comment