இளம்பூரணர் தூக்கு பற்றிக் கூறும் விளக்கம் வருமாறு:
தூக்காவது பாக்களைத் துணிந்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பம் ஆதலின் தூக்கு எனினும் ஓசை எனினும் ஒக்கும்.
பாக்களின் ஓசை
வெண்பா - செப்பலோசை
ஆசிரியப்பா -அகவலோசை
கலிப்பா - துள்ளலோசை
வஞ்சிப்பா - தூங்கலோசை
தொல்காப்பிய நூற்பாக்கள் பின்வருமாறு:
அகவல் என்பது ஆசிரி யம்மே
அஃது அன்று என்ப வெண்பா யாப்பே
துள்ளல் ஓசை கலியென மொழிப
தூங்கல் ஓசை வஞ்சி யாகும்
No comments:
Post a Comment