Sunday, 26 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (யாப்பு)

எழுத்து, அசை, சீர், அடி முதலாகச் சொல்லப்பட்ட அடியினால் தான் குறித்த பொருளை முற்றுப் பெற நிறுத்துவது யாப்பு ஆகும்.

தொல்காப்பியர் யாப்புப் பற்றிக் கூறும் நூற்பா வருமாறு

எழுத்து முதலா ஈண்டிய அடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்

யாப்பின் வகைகள்
தொல்காப்பியர் யாப்பின் வகைகளாக ஏழினைக் கூறியுள்ளார். அவை
1. பாட்டு 2. உரை 3. நூல் 4. வாய்மொழி 5. பிசி 6. அங்கதம் 7. முதுசொல் என்பன.



No comments:

Post a Comment