Saturday, 25 May 2024

தொல்காப்பியரின் செய்யுள் உறுப்புகள் (அசை)

அசை என்பது எழுத்து அசைத்து இசை கோடல் ஆகும். 

அசை இரு வகைப்படும்.
1. இயலசை 
2. உரியசை

இயலசை (2)
1. நேரசை - குறில் தனித்து வரல்
நெடில் தனித்து வரல்
குறிலோடு ஒற்று வரல்
நெடிலோடு ஒற்று வரல்

2. நிரையசை - குறிலிணை வரல்
குறிலிணை ஒற்று வரல் 
குறில் நெடில் வரல்
குறில் நெடில் ஒற்று வரல்

உரியசை (2)
1. நேர்பசை 
2. நிரைபசை

தொல்காப்பியர் அசை குறித்துக் கூறும் நூற்பாக்கள் வருமாறு

குறிலே நெடிலே குறிலிணை குறில் நெடில் 
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி 
நேரும் நிரையும் என்றிசின் பெயரே

இருவகை உகரமோடு இயைந்தவை வரினே
நேர்பு நிரைபும் ஆகும் என்ப 
குறிலிணை உகரம் அல்வழி யான 

இயலசை முதல் இரண்டு ஏனைய உரியசை

No comments:

Post a Comment