Thursday, 22 August 2024

அச்சம் மெய்ப்பாடு

தொல்காப்பியர் அச்சம் தோன்றும் நிலைக்களன்கள் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். 

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே

இந்நூற்பாவில் அணங்கு, விலங்கு, கள்வர், இறை ஆகிய நான்கு நிலைக்களன்களில் அச்சம் தோன்றும்.

மருட்கை மெய்ப்பாடு

மருட்கை - வியப்பு (இளம்பூரணர்)

மருட்கை மெய்ப்பாடு புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் ஆகிய நான்கு நிலைக்களன்களைப் பெற்று வரும்.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

இளிவரல் மெய்ப்பாடு

எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று இளிவரல். இது இகழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு ஆகும். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கு நிலைக்களன்களைப் பெற்று வரும். 

மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த விளிவரல் நான்கே 


எனத் தொல்காப்பியம் இளிவரல் மெய்ப்பாட்டின் நிலைக்களன்களைக் கூறுகின்றது.

Tuesday, 13 August 2024

அழுகை மெய்ப்பாடு

அழுகை மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கு நிலைக்களன்களை அடியொற்றித் தோன்றும்.  தொல்காப்பியம் 
இழிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொல்.பொருள்.மெய்.5)
என்கின்றது.

நகை மெய்ப்பாடு

எள்ளல், இளமை, பேதைமை, மடன் ஆகிய நான்கும் நகை மெய்ப்பாட்டிற்குரிய நிலைக்களன்கள் ஆகும். இதனைத் தொல்காப்பியர் 
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளிட்ட நகை நான்கு என்ப (தொல்.பொருள்.மெய்.4) 
எனக் கூறியுள்ளார். 

மெய்ப்பாடு வகைகள்

எண்வகை மெய்ப்பாடுகள்
நகை, அழுகை, இளிவரல்,  மருட்கை, பெருமிதம், அச்சம், வெகுளி, உவகை என்பன. 

மெய்ப்பாட்டியல் - மெய்ப்பாடு விளக்கம்

மெய்யின்கண் தோன்றும் மாறுபாடு அல்லது உணர்ச்சி வெளிப்பாடு மெய்ப்பாடு ஆகும்.