அங்கதம்
தொல்காப்பியர் செய்யுளை இரு வகைகளைப் பிரிக்கின்றார். அவற்றுள் ஒன்று அங்கதச் செய்யுள். இது வசையொடும் நசையொடும் புணர்ந்து வரும். அதனால்தான் தொல்காப்பியர்,
வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர் (தொல்.பொருள்.செய்.125)
என்கின்றார்.
அங்கதம் வகைகள்
அங்கதம் இரு வகைப்படும். அவை
1. செம்பொருள் அங்கதம்
2. பழிகரப்பு அங்கதம்
என்பனவாகும்.
தொல்காப்பியம்,
அங்கதம் தானே அரில்தபத் தெரியின்
செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே (தொல்.பொருள்.செய்.120)
செம்பொருள் ஆயின் வசையெனப் படுமே (தொல்.பொருள்.செய்.121)
மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும் (தொல்.பொருள்.செய்.122)
ஆகிய நூற்பாக்களில் அங்கதம் பற்றிப் பேசியுள்ளது.
புகழ்வது போன்று வசை
நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் (கலித்.52)
வசை போன்று புகழ்வது
கொடை மடம் படுதல் அல்லது (புறம்.142)